பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதெலாவுக்கு ரசிகர் ஒருவர் 1 லட்சம் ரோஜாக்களை அனுப்பி அசத்தியிருக்கிறார்.

லெஜெண்ட் ஹிட்

ஹிந்தி படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான நடிகை ஊர்வசி ரவுதெலா, கன்னடம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவுதெலா, தமிழில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழில் அறிமுகமானார். ‘தி லெஜண்ட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அசத்தல்

நடிகை ஊர்வசி ரவுதெலா தனது கை விரலில் சிறிய காயம் ஏற்பட்டதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து தான் குணம் பெற வேண்டி தனது தீவிர ரசிகர் ஒருவர், ஒரு லட்சம் விலையுயர்ந்த ரோஜாக்களை அனுப்பியுள்ளதாகப் ஊர்வசி பதிவிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here