தேமுதிக முன்னாள் தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்திற்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

உருவச் சிலை

தேமுதிக முன்னாள் தலைவர் மறைந்த விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை கோயம்பேட்டிலுள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில், அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் விஜயகாந்திற்கு முழு உருவச் சிலை மற்றும் மார்பளவு உருவச் சிலை திறக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 

நலம் விசாரிப்பு

விஜயகாந்த்தின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு பிறகு பிரேமலதா விஜயகாந்தை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேரில் சந்தித்தார். சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்த அவர், அங்கு இருக்கும் விஜயகாந்தின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் பிரேமலதா விஜயகாந்திடம் நலம் விசாரித்தார். இதுதொடர்பான புகைப்படத்தை பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “கேப்டனிடம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆசி பெற்றார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here