தன்னை வாழ வைப்பது தன் வேலை மட்டும் தான் என்றும் தனது வேலையை செய்ய தூண்டும் ஆர்வத்தை சரியாகவும், நேர்த்தியாகவும், திருப்தியாகவும் உணர்வதாகவும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தெரிவித்திருக்கிறார்.  

திறமையானவர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் எத்தனையோ சரவணன் கதாபாத்திரம் மாறினாலும், இறுதிவரை ரச்சிதா மட்டுமே மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. தமிழில் ‘உப்பு கருவாடு’, கன்னடத்தில் ‘பாரிஜாதா’ ஆகிய படங்களில் ரிச்சிதா கதாநாயகியாக நடித்துள்ளார்.

சின்னத்திரையில் சாதனை

பெங்களூரில் பிறந்து வளர்ந்த ரச்சிதா, கன்னட சேனலில் ஒளிபரப்பான ’மேக மந்தரன்’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதனைதொடர்ந்து 5 கன்னட சீரியல்கள், 2 தெலுங்கு சீரியல்களில் நடித்துவிட்டு, 2011-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த தினேஷ் என்பவரை ரச்சிதா காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பிரிவோம் சந்திப்போம் 2, சரவணன் மீனாட்சி, இளவரசி, மசாலா குடும்பம் உள்ளிட்ட தமிழ் சீரியல்களில் அவர் நடித்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான ஜூனியர் சீனியர், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0 ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இடம்பெற்றிருந்த ரச்சிதா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர். தினேஷுக்கும் ரச்சிதாவுக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்துவேறுபாடுகள் காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு இவர்கள் பிரிந்தார்கள்.

மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்

இதனிடையே சமீபத்தில் கன்னடத்தில் வெளியான ரங்கநாயகா என்ற படத்தில் நடித்திருந்த ரச்சிதா மகாலட்சுமி, தெலுங்கில் தள்ளி மனசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அவர் கேமராவை தொட்டு வணங்கும் வீடியோ பதிவை வெளியிட்டு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “என்னை வாழ வைப்பது என் வேலை மட்டும் தான். எனது வேலையை செய்ய தூண்டும் எனது ஆர்வத்தை சரியாகவும், நேர்த்தியாகவும், திருப்தியாகவும் உணர்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எனது வேலையை சரியாக செய்வதில் எப்போதும் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். தள்ளி மனசு படத்தில் விரைவில் பல அப்டேட்கள் வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here