மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்றைய தினம் வெளியான ‘வாழை’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

உண்மை சம்பவம்

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகம் ஆனவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். இதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீசான கர்ணன், மாமன்னன் படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து தற்போது தனது நான்காவது படமாக ‘வாழை’யை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். சிறு வயதில் தன்னை பாதித்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

வசூல் குவிப்பு

நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியான ‘வாழை’ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருவதால், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் வசூலில் அசத்தி வருகிறது. அதன்படி முதல் நாளில் ‘வாழை’ படம் ரூ. 1.3 கோடி முதல் ரூ. 1.5 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால், வரும் நாட்களில் ‘வாழை’ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here