ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை காஜல் அகர்வாலிடம் இளைஞர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிட் படங்கள்

பழனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் காஜல். பேரரசு இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்த நடிகை காஜல் அகர்வால், நான் மகான் அல்ல படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதன்பிறகு மாற்றான், துப்பாக்கி போன்ற படங்களின் ஹிட்டால், முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தார் காஜல். எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்த மகதீரா திரைப்படமும் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் ஆனது.

ரீஎன்ட்ரி

தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், 2020 ஆம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயான நடிகை காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ஹிந்தியில் உமா, தெலுங்கில் சத்யபாமா போன்ற படங்களில் நாயகியாக படித்து வருகிறார்.

அதிர்ச்சி

இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை காஜல் அகர்வால் பங்கேற்றார். அப்போது ரசிகர்கள் பலர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அந்த நேரத்தில் செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் ஒருவர் சற்றும் எதிர்பாராத வகையில் காஜல் அகர்வாலின் இடுப்பில் கை வைத்து செல்ஃபி எடுக்க முயன்று அவருக்கு அதிர்ச்சி கொடுத்தார். ரசிகரின் இந்த செயலால் காஜல் அகர்வால் அதிர்ச்சியில் ரியாக்ட் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரல் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here