சென்னை அருகே விபத்தில் சிக்கிய நடிகை அருந்ததி நாயருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து

பொங்கி எழு மனோகரா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை அருந்ததி நாயர். இவர் சைத்தான், கன்னி ராசி, ஆயிரம் பொற்காசுகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர், கடந்த 14ஆம் தேதி சென்னை அடுத்த கோவளம் பகுதியில் தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரபாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நடிகை அருந்ததி நாயர் பலத்த காயமடைந்துள்ளார்.

தீவிர சிகிச்சை

அருந்ததி நாயர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் கசிந்தன. அதனை தற்போது அவரது சகோதரி ஆர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான பதிவில் அவர் கூறியிருப்பதாவது; “மூன்று நாட்களுக்கு முன் விபத்து ஒன்றில் அருந்ததி பலத்த காயமடைந்து உயிருக்காக போராடி வருகிறார். திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து வென்டிலேட்டர் உதவி உடன் சிகிச்சை பெற்று வருகிறார்” என தெரிவித்துள்ளார். நடிகை அருந்ததி நாயர் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருவது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here