தன்னை பற்றி வெளிவந்த காதல் வதந்திக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார் நடிகை ஷோபிதா.

விவாகரத்து முடிந்தது

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் நாக சைதன்யா. நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2017 ஆம் ஆண்டு சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்து வந்த நாக சைதன்யாவை சுற்றி பல காதல் வதந்திகள் பரவி வந்தது.

வைரல் புகைப்படங்கள்

பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷோபிதாவுடன் நாக சைதன்யா காதலில் இருப்பதாக தகவல்கள் பரவின. கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் நாக சைதன்யா லண்டன் சுற்றுப்பயணம் சென்றபோது அங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு உணவருந்த சென்றார். அங்கே சமையல் கலைஞருடன் எடுக்கப்பட்ட போட்டோவில் தூரத்தில் நடிகை ஷோபிதா துலிபாலா அமர்ந்திருந்தார். அந்த புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

டென்ஷனான ஷோபிதா

ஆனால் இந்த புகைப்படம் குறித்து இதுவரையில் இருவரும் வாய் திறக்காத நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஷோபிதா. அவர் கூறி இருப்பதாவது, “நான் ஒரு கிளாசிக்கல் டான்சர். எனக்கு நடனமாடுவது பிடிக்கும். மணிரத்னம் படத்தில் ரஹ்மானின் 3 பாடல்களுக்கு நடனமாடுவது என்பது எனக்கு மிகவும் பெரிய விஷயம். நான் தற்போது அதில் கவனம் செலுத்தி வருகிறேன். எது பற்றியும் முழுமையாக தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. நான் தவறாக எதையும் செய்யாத பொழுது அதுபற்றி விளக்க விரும்பவில்லை. அது என் வேலையும் இல்லை. இதுபோன்ற அறைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கு பதிலளிப்பதற்கு பதில், ஒருவர் அவரது வாழ்க்கையில் கவனம் செலுத்தி அமைதியாக நல்ல மனிதராக இருக்க முயற்சிக்கலாம்” என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here