நடிகர் மனோ பாலாவின் கடைசி நிமிடத்தில் பேசிய தருணங்களை மனவேதனையுடன் பகிர்ந்துள்ளார் இயக்குநர் கதிர்வேலு.

வெற்றி இயக்குநர்

ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நடிகர் மனோபாலா, ரஜினி, விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி வெற்றி இயக்குநராக இருந்து வந்தவர் மனோபாலா. நடிகராக 345 படங்களும், தயாரிப்பாளராக 3 படங்களும், 24 படங்களில் இயக்குநராகவும் பணியாற்றியவர் மனோ பாலா. இந்நிலையில் இன்னும் சில படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்த நடிகர் மனோ பாலா, இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார். சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்த இவர், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

பிரபலங்கள் அஞ்சலி

சாலிகிராமத்தில் உள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மனோ பாலாவின் உடலுக்கு இயக்குநர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மனோ பாலா கடைசியாக கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தின் இயக்குநர் கதிர்வேலு மனோ பாலா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தையும், வீடியோக்களையும் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

உருகிய இயக்குநர்

மேலும் இயக்குநர் வெளியிட்டுள்ள பதிவில், “கடைசியாக படப்பிடிப்பு தளம் வந்து படுத்தபடியே, என்னால முடியலடா! மருத்துவமனைக்கு போய் வருகிறேன் என சொல்லிவிட்டு போனவரே, இப்படி சொல்லாமல் போவது முறையா? கடைசி பிறந்த நாளை எம்மோடு கொண்டாடிவிட்டு, இப்படி நடுவழியில் தின்டாட விட்டுவிட்டு போதல் சரியா?” என்று மனவேதனையுடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here