பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளம் குந்தவையாக நடித்த நிலா குறித்து தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

கச்சிதமான கதாப்பாத்திரம்

பொன்னியின் செல்வன் படத்திற்காக அந்தந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நடிகர்களை தேர்வு செய்வதில் இயக்குநர் மணிரத்னம் மெனைக்கட்டு இருப்பது அந்த படத்தை பார்க்கும் பொழுதே தெரிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு கச்சிதமாக பொருந்தும் நடிகர்களை தேர்வு செய்ததே இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

அசத்திய திரிஷா

நேற்று வரை பொன்னியின் செல்வன் 2 படத்தின் வசூல் ரூ.150 கோடியை எட்டியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்திற்கு ஏற்றவாறு பல மாற்றங்களை மணிரத்னம் செய்திருப்பதாகவும், நாவலில் இருக்கக்கூடிய கிளைமாக்ஸ் காட்சிகள் ஏதும் படத்தில் இடம்பெறவில்லை என்றும் பல சர்ச்சைகள் சமூக வலைதளத்தில் வலம் வந்தாலும், மணிரத்னத்தின் இந்த பிரம்மாண்ட முயற்சியை சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பொன்னின் செல்வன் நாவலில் முக்கிய கதாபாத்திரமாக இருக்கக்கூடிய குந்தவை என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து அசத்தியுள்ளார். அவருக்கு செய்யப்பட்டுள்ள ஆடை அலங்காரம் அனைத்தும் மிகவும் ஆராய்ச்சி செய்து, பயன்படுத்தியதாக தகவல்கள் வெளிவந்தது. அதேபோல் திரிஷாவின் நடை, உடை, பாவனை மட்டும் இல்லாமல் கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாகவே பொருந்தி இருந்தார்.

பிரபலத்தின் மகள்

இந்நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டில் இளம் குந்தவையாக நடித்தவர் குறித்து தற்போது தகவல் வெளிவந்துள்ளது. நடிகை கன்யா பாரதியின் மகள் நிலா தான் இளம் குந்தவையாக நடித்துள்ளார். கன்யா பாரதி காவிய அஞ்சலி, தெய்வம் தந்த வீடு உள்ளிட்ட தொடர்களில் நடித்த பிரபலமானவர். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா என்ற தொடரின் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். தனது அம்மாவுடன் இளம் குந்தவை நிலா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here