எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் மாரிமுத்து சமீபத்தில் கொடுத்த பேட்டியில் விஜய் மற்றும் அஜித் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.

தொழில் போட்டி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித்குமார் மற்றும் விஜய். இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக போட்டிகள் இருந்தாலும், இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. என்ன தான் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், இவர்களின் படம் வெளிவரும் போதும் இவர்களைப் பற்றிய பேச்சுக்கள் இருவரின் ரசிகர்களிடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தற்போது மாஸ் நடிகர்களாக இருந்து வரும், அஜித்தும், விஜயும் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தெறிக்க விட்டு வருகின்றனர்.

இருவரும் வேற மாதிரி

சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்குமார். விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமா இயக்குநர் மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரிமுத்து சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் அஜித் மற்றும் விஜய் பற்றி தகவல் கூறியுள்ளார். அதாவது “அஜித் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசிவிடுவார், எதையும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டார். ஆனால் விஜய் அப்படி கிடையாது. மனதில் நினைப்பதை வெளியே சொல்ல மாட்டார். ஒருவர் மீது எந்த அளவுக்கு கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அவரிடம் சிரித்து பேசுவார். மிகவும் பொறுமையானவர்”. என மாரிமுத்து கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here