பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் விஜே தீபிகா மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

நெகட்டிவ் கதாபாத்திரங்கள்

அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் பல ரசிகர்களைக் கொண்டுள்ளது. கூட்டு குடும்பமாக இருக்கும் இந்த தொடரில் நான்கு அண்ணன்களின் பாசமே முக்கியமான கதையாக உள்ளது. கடைசி தம்பியாக நடிக்கும் கண்ணன் கதாபாத்திரம், மிகவும் சுட்டித்தனமாகவும் பொறுப்பில்லாத பையனாகவும் இருக்கக்கூடியவர். காதலித்து வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு பல இன்னல்களுக்கு பிறகு மீண்டும் வீட்டில் இணைகிறார். தற்போது கண்ணன் கதாபாத்திரம் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அரசு வேலையும் பெறுகிறார். கதிரும் ஹோட்டல் தொடங்கி தனியாக நன்றாக சம்பாதித்து வருகிறார். கண்ணன் மற்றும் கதிரும் நன்றாக சம்பாதிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் சம்பளம் வந்தவுடன் பாதி சம்பளத்தை தனது செலவுக்காக எடுத்து வைத்துக் கொண்டு மீதி பணத்தை மட்டும் மூத்த அண்ணன் மூர்த்தியிடம் கொடுக்கிறார் கண்ணனும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும். மிகவும் சுயநலமாக யோசிக்கும் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாவும், மற்றவர்கள் சம்பாதிப்பதை ஏளனமாக பேசும் கண்ணனும் கடந்த சில நாட்களாக நெகட்டிவ் கதாபாத்திரங்கள் போல இருக்கின்றது . இந்த இரண்டு கதாபாத்திரமும் ரசிகர்களிடையே வெறுப்பை சம்பாதித்து வருகின்றனர்.

மீண்டும் என்ட்ரி

மற்றவர்களை ஏளனமாக பேசும் இவர்கள் இருவரும்தான் குடும்பத்தையே பிரிக்கப் போகிறார்கள் என்று பல கமெண்ட்கள் குவிந்தும் வருகின்றன. இந்நிலையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் சாய் காயத்ரி இந்த தொடரைவிட்டு விலகுவதாக தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருந்தார். மேலும், அதற்கான காரணத்தையும் வெளியிட்டு இருந்தார். அவருக்கு பிறகு யார் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இதற்குமுன் நடித்த விஜே தீபிகாவே மீண்டும் நடிக்க இந்த தொடரில் இணைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here