பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.

‘வைகைப் புயல்’

தமிழ் சினிமாவில் காமெடி காட்சிகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் வடிவேலு. தனது எதார்த்தமான நடிப்பாலும், உடல் அசைவுகளாலும் ரசிகர்களை கட்டிபோட்டார். ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால், திரையுலகிலிருந்து விலகியே இருந்தார் வடிவேலு. இந்நிலையில், நாய் சேகர் திரைப்படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்தார்.

மரணம்

இந்த நிலையில் மதுரை வீரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்கிற பாப்பா, உடல்நலக் குறைவால் நேற்றிரவு மரணமடைந்தார். அவரது உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். வடிவேலுவின் தாயார் மரணத்துக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here