தனக்கு எதிராக சைபர் தாக்குதல்கள் அதிகம் நடந்ததாக நடிகை பாவனா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

ரீ என்டரி

தமிழில் தீபாவளி, சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பாவனா. மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். கன்னடத்தில் பாவனா நடித்த படத்தை தயாரித்த நவீனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்ததை அடுத்து இருவரும் 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு 5 ஆண்டுகளாக சினிமாவைவிட்டு ஒதுங்கி இருந்த அவர், தற்போது மீண்டும் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு’ என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

சைபர் தாக்குதல்

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்த நடிகை பாவனா, தனக்கு எதிராக சைபர் தாக்குதல்கள் அதிகம் நடந்ததாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது; ”மலையாள திரையுலகில் மீண்டும் நடிக்க வரமாட்டேன் என்று நினைத்தேன். அப்படி வந்தால் மன அமைதி போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் என் நண்பர்கள் மீண்டும் நடிக்க வைத்து விட்டார்கள். இணைய தளங்களில் எனக்கு எதிராக அவதூறுகள் பரவி வருகின்றன. வலைத்தளம் மூலம் மற்றவர்களை மிரட்டுவது, களங்கம் ஏற்படுத்துவது சிலரின் வேலையாகிவிட்டது. பணம் கொடுத்து ஆட்களை பணியமர்த்தியும் இதை செய்ய வைக்கிறார்கள். எனது கதாபாத்திரங்கள் வாயிலாக என்னை அறிந்தவர்களும் இதனை செய்தனர். என் முதுகுக்கு பின்னால் பேசியவர்களை நான் மறக்க மாட்டேன்” இவ்வாறு பாவனா கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here