ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த ‘பிக் பாஸ்’ சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ்

மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறது. ஜூன், ஜூலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்த விஜய் டிவி, இம்முறை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணத்தால் அந்த திட்டத்தை தள்ளி வைத்தது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 4க்கான பணிகளை விஜய் டிவி நிர்வாகம் தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

அக்., 4 முதல் ஒளிபரப்பு?

அதனைதொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4க்கான மற்றொரு புரொமோ வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் ஹிட்டானது. நடிகர் கமல்ஹாசன் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்து அனைவரையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறார்கள் என்றும் யார் யாரெல்லாம் பங்கேற்கப் போகிறார்கள் என்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விகளும், குழப்பங்களும் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி முதல் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் வரும் 19ஆம் தேதியில் இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. பல நடிகர், நடிகைகளின் பெயர்கள் அன்றாடம் வெளிவந்து கொண்டே இருந்த நிலையில், ரம்யா பாண்டியன், ஷாலு ஷம்மு, லட்சுமி மேனன், ரியோ ராஜ், ஷிவானி, மணிமேகலை, சஞ்சனா சிங் போன்ற பலர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போவதாக தெரிகிறது. யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டுக்கு செல்லப் போகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில், ரசிகர்களிடையே ஆர்வம் கூடிக் கொண்டே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here