ஊரடங்கு தளர்வுகளால் வெளியே வரும்போது அது நம் உயிருக்கும், உறவுகளுக்கும் ஆபத்தாகிவிடக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஊரடங்கில் தளர்வு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, பின்னர் படிப்படியாக தளர்வுகளுடன் நீட்டித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அதிகபட்ச தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கட்டதும், வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டதும், பூங்காக்கள் திறக்கப்பட்டதும் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இருப்பினும் இந்த தளர்வுகளை தேவையில்லாமல் பயன்படுத்தி ஆபத்தை விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த தளர்வுகளை அவசியத்துக்கு மட்டுமே பயன்படுத்துமாறும், அவசியம் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் தமிழக அரசும் கேட்டுக் கொண்டுள்ளது.

கமல் வேண்டுகோள்

இந்த நிலையில், நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளிவரும் போது, நம் உயிருக்கும், உறவுகளுக்கும் நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது. மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே நமைக் காத்திடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here