விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக நடித்து வரும் ஃபரினா ஆசாத், தன்னை ரசிகர்கள் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாக தெரிவித்திருக்கிறார்.

மிரட்டும் வில்லி

‘ஒரு நிமிடம் ப்ளீஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஃபரினா, சன் டிவியில் ஒளிபரப்பான ‘கிச்சன் கலாட்டா’ என்ற ஷோவினால் பிரபலம் அடைந்தார். பிறகு சன் டிவியில் ‘அழகு’ என்ற சீரியலில் நடித்து வந்த ஃபரினா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அஞ்சறைப்பெட்டி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தனது துறுதுறு பேச்சால் சின்னத்திரையில் மறக்கமுடியாத நடிகையாகவே வலம் வந்து கொண்டிருந்த ஃபரினா, தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரபாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். புசு புசு தேகம், கண்ணைக் கவரும் அழகு, அளவான கவர்ச்சியுடன் அனைவரையும் ஈர்த்து வந்த வெண்பா, இணையத்தளங்களில் சமீபகாலமாகவே தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கெட்ட வார்த்தைகளில் திட்டு

இந்த நிலையில் Little Talks யூடியூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்த ஃபரினா, சின்னத்திரை உள்ளிட்ட பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிப்பதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைப்பதாகவும், அதேசமயம் திட்டுக்களும் கிடைக்கிறது என்றும் தெரிவித்தார். சிலர் தன்னை கெட்ட வார்த்தைகளில் திட்டுவதாக கூறிய அவர், அதை தான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை எனவும் தெரிவித்தார். மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்பட்ட பிறகு சக நடிகர், நடிகைகளை சந்தித்தது மகிழ்ச்சியளித்ததாகவும், ‘பாரதி கண்ணம்மா’ ஷூட்டிங் ஸ்பாட்டே கல்லூரி போல செம ஜாலியா இருக்கும் என்றும் ஃபரினா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here