அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதயாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமிதாப், அபிஷேக்கிற்கு கொரோனா

இந்திப் பட உலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு நேற்று திடீரென சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சையில் உள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்தது. பின்னர் அவரும் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா

ஆனால் ஐஸ்வர்யா, அவரது மகள் ஆராதயா, தாய் ஜெயா பச்சனுக்கு கொரோனா ரிசல்ட் நெகடிவ் என வந்தது. இந்நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட மற்றொரு பரிசோதனை முடிவில் ஐஸ்வர்யா ராய், மகள் ஆராதயா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அமிதாப் பச்சனின் குடும்பத்தினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

நலம் விசாரிப்பு

அமிதாப் பச்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். அவரிடம் அமிதாப் பயப்படும்படி ஏதுமில்லை லேசான அறிகுறிகளே உள்ளன என கூறியுள்ளார். அதேபோல் நடிகர் கமலும் அமிதாப் விரைவில் நலம்பெற வேண்டும் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அமிதாப் பச்சனும் அவரது குடும்பத்தினரும் விரைவில் நலம்பெற வேண்டி அவர்களது ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here