திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிறந்த குணச்சித்திர நடிகர்

1973 ஆம் ஆண்டு ராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமான நடிகர் சரத்பாபு, 1977 ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். அதன்பிறகு நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், உயிர் உள்ளவரை, முள்ளும் மலரும், முடிசூடா மன்னன் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தார். 70களில் தனது திரைப்பயணத்தை துவங்கிய சரத்பாபு, ஆரம்ப கட்டத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அதன்பிறகு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த சரத்பாபு, முத்து, அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். ஆளவந்தான், புதிய கீதை, பேரரசு, கள்வனின் காதலி என்று இவரது நடிப்பில் வெளிவந்த ஹிட் படங்கள் ஏராளம். சமீபத்தில் வெளியான வசந்த முல்லை என்ற படத்தில் டாக்டராக நடித்திருந்தார் சரத்பாபு.

ICUவில் அனுமதி

நடிகர் சரத்பாபு 1974 ஆம் ஆண்டு ரமா பிரபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 1988 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்தும் பெற்றனர். அதன்பிறகு 1990 ஆம் ஆண்டு சினேகா நம்பியார் என்பவரை திருமணம் செய்துகொண்ட சரத்பாபு, மீண்டும் 2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். தற்போது 71 வயதாகும் சரத்பாபு ஹைதராபாத்தில் இருக்கும் தனது வீட்டில் வசித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ள சரத்பாவுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் தற்போது சினிமா பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here