நடிகை வனிதா தனது காதலரான பீட்டர் பாலை கிறிஸ்துவ முறைப்படி இன்று மூன்றாவது திருமணம் செய்துகொண்டார்.

கடந்து வந்த வாழ்க்கை

தென்னிந்திய திரை நட்சத்திர ஜோடியான விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியரின் மகள் நடிகை வனிதா. கடந்த 1995ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு மாணிக்கம் எனும் படத்தில் நடித்தார். இரு படங்களும் சரியாக ஓடாததால் சினிமாவை விட்டு விலகிய வனிதா, நடிகர் ஆகாஷை திருமணம் செய்து 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பின் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்து பின்னர் 2010ல் அவரை விவாகரத்து செய்தார். வனிதாவிற்கு முதல் கணவர் மூலம் இரு குழந்தைகளும், இரண்டாவது கணவர் மூலம் ஒரு குழந்தையும் உள்ளனர். இதனிடையே நடன இயக்குனர் ராபர்ட்டுன் கிசுகிசுக்கப்பட்ட வனிதா, ஜூன் 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார்.

மனதை திருடிய பீட்டர் பால்

இதுதொடர்பாக ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த வனிதா, தனது வாழ்க்கையில் நுழைந்த பீட்டர் பாலுடன் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்வதாகவும், என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் குறிப்பிடிருந்தார். எனது குழந்தைகளின் சம்மதத்தோடு தான் எங்கள் திருமணம் நடைபெறுவதாகவும் அவர் கூறியிருந்தார். அதுதொடர்பான திருமண அழைப்பிதழ் வெளியான போது, வயதுக்கு வந்த மகளை வைத்துக் கொண்டு 40 வயதில் மூன்றாவது திருமணம் தேவையா என சில விமர்சனங்கள் எழுந்தாலும், பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

லிப்லாக்

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே வனிதா – பீட்டர் பால் திருமணம் இன்று மிக எளிமையாக நடந்தது. கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை நடிகை வனிதா கரம்பிடித்துள்ளார். வெள்ளை நிற திருமண உடையில் தேவதை போல் வனிதாவும், கோட் சூட்டில் பீட்டர் பாலும் அசத்தலாய் உள்ளனர். இருவரும் மோதிரம் மாற்றியக் கையோடு, உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து அன்பைப் பரிமாறிக்கொண்டனர். நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே இவர்களது திருமணத்தில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here